sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வேளாண் பல்கலையில் 'டிரோன்' பயிலரங்கு

/

வேளாண் பல்கலையில் 'டிரோன்' பயிலரங்கு

வேளாண் பல்கலையில் 'டிரோன்' பயிலரங்கு

வேளாண் பல்கலையில் 'டிரோன்' பயிலரங்கு


ADDED : டிச 27, 2024 12:55 AM

Google News

ADDED : டிச 27, 2024 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை வேளாண் பல்கலை வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பி.டெக்., வேளாண் பொறியியல் மாணவர்களுக்கு, 'ஏரோ மாடலிங் மற்றும் டிரோன் தொழில்நுட்பம்' குறித்த இரண்டு நாள் பயிலரங்கு நடந்தது.

கல்லூரி டீன் ரவிராஜ், பயிலரங்கைத் துவக்கி வைத்து, 'டிரோன் தொழில்நுட்பம் நவீன விவசாயத்தை மாற்றி அமைக்கும் ஒரு காரணியாக அமைவதுடன், துல்லிய வேளாண்மை, பயிர் கண்காணிப்பு, தெளித்தல் மற்றும் பிற வேளாண் நடவடிக்கைகளில் டிரோன்களின் பயன்பாடு குறித்து' விளக்கினார்.

மேலும், இத்துறையில் ரிமோட் பைலட் உரிமம் பெறுவது முதல், புதிய தொழில் துவங்குவது பற்றியும் எடுத்துரைத்தார்.

கோவை, ஆர்.சி. ஹாபி இந்தியா நிறுவனத்தின் முதுநிலை ஏரோமாடலிங் பயிற்றுவிப்பாளர் ராஜ்குமார், பயிற்சி அளித்தார்.

டிரோன் பாகங்களை இணைத்தல், பல்வேறு துணை அமைப்புகளின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்வது, டிரோன்களை சரி செய்வது, ஆளில்லா விமானங்களை இயக்குவதன் வாயிலாக கள நிலைமைகளை புரிந்துகொள்ளுதல், விமான சட்டங்களுக்கு உட்பட்டு டிரோன்களை இயக்குதல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us