ADDED : அக் 08, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : பொள்ளாச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், நாளை, 9ம் தேதி காலை, 11:00 முதல் 1:00 மணி வரை நடக்கிறது. பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில், மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது.
இக்கூட்டத்தில், மின்நுகர்வோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து, தீர்வு காணப்படும். இத்தகவலை பொள்ளாச்சி செயற்பொறியாளர் ராஜா தெரிவித்துள்ளார்.