/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தம்பு மேல்நிலைப்பள்ளியில் இன்று கல்வி ஆலோசனை முகாம்
/
தம்பு மேல்நிலைப்பள்ளியில் இன்று கல்வி ஆலோசனை முகாம்
தம்பு மேல்நிலைப்பள்ளியில் இன்று கல்வி ஆலோசனை முகாம்
தம்பு மேல்நிலைப்பள்ளியில் இன்று கல்வி ஆலோசனை முகாம்
ADDED : ஜன 26, 2026 05:17 AM
பெ.நா.பாளையம்: பிரஸ்காலனி தம்பு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ், 2 மாணவர்களுக்கான கல்லூரி படிப்பு குறித்த கல்வி ஆலோசனை முகாம், இன்று நடக்கிறது.
முகாமில், கோவை மாவட்டத்தில் இருந்து, 25க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை பல்கலைகள் கலந்து கொள்கின்றன. இதில், பிளஸ் 2படிக்கும் தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் முகாமில் பங்கேற்று, எந்த பிரிவு படிக்கலாம், என்ன மேற்படிப்பு மேற்கொள்ளலாம், கல்வி கட்டண சலுகைகள் மற்றும் விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். ஆண்டுதோறும் தம்பு மேல்நிலைப்பள்ளி நடத்தும் இம்முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பெற்றோர்களுடன் பங்கேற்று, பயன் பெற்று வருகிறார்கள்.
முகாம் இன்று காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை பள்ளி வளாகத்தில் நடக்கிறது. நுழைவு கட்டணம் இல்லை.

