ADDED : மார் 27, 2025 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம்: பொள்ளாச்சி, சின்னதொப்பம்பட்டியில் ரோட்டை கடந்த மூதாட்டி, பைக் மேதி இறந்தார்.
பொள்ளாச்சி அடுத்துள்ள, சின்னதொப்பம்பட்டியை சேர்ந்தவர் ஆராயிஅம்மாள், 63, கூலி தொழிலாளி. இவர், பஸ் ஸ்டாப்பிற்கு செல்ல ரோட்டை கடந்த போது, அவ்வழியே அடையாளம் தெரியாத நபர் ஓட்டி சென்ற பைக் மோதியதில், படுகாயமடைந்தார்.
அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். விபத்து குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.