ADDED : மே 29, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு, ; சூலக்கல் - கிணத்துக்கடவு ரோட்டில் பைக்கில் சென்ற எலக்ட்ரீசியன், தனியார் பஸ் மோதி படுகாயமடைந்தார்.
மதுரையை சேர்ந்தவர் முத்து, 48, எலக்ட்ரீசியன். இவர், பொள்ளாச்சியில் உள்ள கல்குவாரியில் வேலை செய்து வருகிறார். இவர் பணி முடித்து பைக்கில், சூலக்கல் - கிணத்துக்கடவு செல்லும் ரோட்டில் சென்றார். அப்போது, எதிரே சூலக்கல்லை சேர்ந்த சபரி, 23, என்பவர் ஓட்டி வந்த தனியார் பஸ், முத்து மீது மோதியது. விபத்தில் படுகாயமடைந்த அவரை மீட்டு பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.