/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : நவ 18, 2025 03:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, அங்கலகுறிச்சியில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது.
அங்கலகுறிச்சி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (19ம் தேதி) காலை, 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை அங்கலகுறிச்சி கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது.
உடுமலை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், கோட்டத்துக்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள் பங்கேற்று, மின்சாரம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை அங்கலகுறிச்சி செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்தார்.

