/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : செப் 15, 2025 10:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மாநகர் மைய கோட்ட அலுவலகத்தில், நாளை (செப். 17) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
ரேஸ்கோர்ஸ், அப்துல் ரஹீம் சாலையில் உள்ள மாநகர் மைய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், காலை 11 மணிக்கு நடக்கும் இக்கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் (மாநகர்) சதீஷ்குமார் பங்கேற்கிறார்.
இந்த அலுவலகத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோர் பங்கேற்று, மின் இணைப்பு உள்ளிட்ட மின் வாரியம் தொர்டபான குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம், என, செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.