sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மலை உச்சியில் இருந்து தவறி விழுந்த யானை பலி

/

மலை உச்சியில் இருந்து தவறி விழுந்த யானை பலி

மலை உச்சியில் இருந்து தவறி விழுந்த யானை பலி

மலை உச்சியில் இருந்து தவறி விழுந்த யானை பலி


ADDED : ஜன 11, 2025 09:23 AM

Google News

ADDED : ஜன 11, 2025 09:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார் : நீலகிரி மாவட்டம், குன்னுார்- மேட்டுப்பாளையம் மலை பாதையில், 7 யானைகள் உலா வருகின்றன. நேற்று காலை, 8:00 மணியளவில், கே.என்.ஆர்., அருகே மலை உச்சியில், பாறை மீது நின்று, 3 யானைகள் பசுந்தழைகளை உட்கொண்ட போது, ஒரு யானை பாறையில் வழுக்கி உருண்டு, 20 அடி பள்ளத்தில் விழுந்து காயமடைந்தது.

தகவலின் பேரில், குன்னுார் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, தண்ணீர் கொடுத்து, யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, யானை திடீரென எழ முயன்ற போது, மீண்டும், 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. மற்ற யானைகள் தாழ்வான பகுதிக்கு வரும் என்பதால், முன்னெச்சரிக்கையுடன் யானையின் உடலை மீட்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம், உதவி வன பாதுகாவலர் மணிமாறன், முதுமலை புலிகள் காப்பக உதவி கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமார், குன்னுார் வனச்சரகர் ரவீந்திரநாத் உட்பட வனத்துறையினர் பொக்லைன் உதவியுடன் யானையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்த பின் மாலை, 6:00 மணியளவில் புதைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

வனத்துறையினர் கூறுகையில்,'இறந்த பெண் யானைக்கு, 15 வயது இருக்கும். பிரேத பரிசோதனை விபரம் வந்தவுடன் பிற தகவல்கள் தெரியவரும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us