ADDED : ஜூன் 18, 2026 08:02 AM

அ நிறம் | அளவு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, மெட்டுவாவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், 'ஜக்கோபி' நிறுவனத்தினர் மற்றும் 'கோவை டயட் ஸ்டெம் லேப்' நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.
இதில், சுற்றுச்சூழல் குறித்து தலைமை ஆசிரியர் மயிலாத்தாள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களிடையே பேசினர். மேலும், சுற்றுச்சூழல் குறித்து மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு 'ஜக்கோபி' நிறுவனத்தின் சார் பில் பரிசுகள் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மாணவர்கள் அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
