/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எக்ஸெல் - ஏ.ஐ., ஒருங்கிணைப்பு பயிற்சி
/
எக்ஸெல் - ஏ.ஐ., ஒருங்கிணைப்பு பயிற்சி
ADDED : நவ 07, 2025 09:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை, வேளாண் பல்கலை, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், மைக்ரோசாப்ட் எக்ஸெல் மற்றும் ஏ.ஐ., ஒருங்கிணைப்பு தொடர்பாக 3 நாள் பயிற்சி நடந்தது.
டீன் ரவிராஜ் பயிற்சியைத் துவக்கி வைத்து, இன்ஜினீயர்களுக்கு முடிவெடுத்தல், திட்டமிடல், செயல்படுத்துதலில் எக்ஸெல் பயன்பாடு குறித்து விவரித்தார்.
தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் பாலாஜி கண்ணன், கருத்துரை அமர்வுகளுக்கு தலைமை வகித்தார்.
எக்ஸெல் அடிப்படை செயல்பாடுகள் முதல் மேம்பட்ட நிலை, ஏ.ஐ., ஒருங்கிணைப்பு குறித்து விரிவாக விளக்கப்பட்டது. பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

