/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தங்கள் குறைகளை சொல்ல விவசாயிகளுக்கு அழைப்பு
/
தங்கள் குறைகளை சொல்ல விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : செப் 25, 2024 09:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைகேட்புக்கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நாளை நடக்கிறது.
இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை மாவட்டத்தில், விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் செப்., மாதத்திற்கான உற்பத்திக்குழுக்கூட்டம், நாளை காலை 9:30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
இதைத்தொடர்ந்து காலை 10:30 மணிக்கு, விவசாயிகள் குறை கேட்புக்கூட்டமும், கலெக்டர் அலுவலகத்திலுள்ள மக்கள் குறைதீர்ப்புக்கூட்ட அரங்கில் நடக்கிறது.
கோவை மாவட்ட விவசாயிகள் பங்கேற்க, கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.