/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மானிய திட்டம் அறிய விவசாயிகளுக்கு வாய்ப்பு
/
மானிய திட்டம் அறிய விவசாயிகளுக்கு வாய்ப்பு
ADDED : ஆக 06, 2025 09:12 PM
அன்னுார்; வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை சார்பில், 'உழவரைத் தேடி' என்னும் வேளாண்மை உழவர் நலத்துறை முகாம் அன்னுார் வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது.
நா ளை (8ம் தேதி) காலை 10:00 மணிக்கு, மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி விவசாயிகளுக்கு, குருக்கம்பாளையம் ராயர் கோவில் மண்டபத்தில் நடைபெறுகிறது. அல்லப்பாளை யம் ஊராட்சி விவசாயிகளுக்கு, அல்லப் பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், பட்டு வளர்ச்சி, கால்நடை வளர்ப்பு, வேளாண் வணிகம், வேளாண் விற்பனை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்று மானிய திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கின்றனர்.'
விவசாயிகள் பங்கேற்று பயன் பெறலாம்,' என, அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.