sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விவசாயிகளின் வழித்தட பிரச்னை கலெக்டரிடம் முறையிட முடிவு

/

விவசாயிகளின் வழித்தட பிரச்னை கலெக்டரிடம் முறையிட முடிவு

விவசாயிகளின் வழித்தட பிரச்னை கலெக்டரிடம் முறையிட முடிவு

விவசாயிகளின் வழித்தட பிரச்னை கலெக்டரிடம் முறையிட முடிவு


ADDED : நவ 11, 2024 07:02 AM

Google News

ADDED : நவ 11, 2024 07:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார் : வாரப்பட்டியில் விவசாயிகளின் வழித்தட பிரச்னை குறித்து கலெக்டரை சந்தித்து முறையிட ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சுல்தான்பேட்டை அடுத்த வாரப்பட்டியில், 370 ஏக்கர் பரப்பளவில், 260 கோடி ரூபாய் மதிப்பில் ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. அங்கு சாலை அமைக்கும் பணி நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களின் வழித்தடத்தை உறுதி செய்து விட்டு பணிகள் செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனால், பணிகள் நிறுத்தப்பட்டன.

இதையடுத்து, இப்பிரச்னை குறித்து விவாதிக்க ஆலோசனை கூட்டம் நடந்தது. எம்.எல்.ஏ., கந்தசாமி, ஒன்றிய கவுன்சிலர் மகாலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

எம்.எல்.ஏ., கூறுகையில்,விவசாயிகளின் போராட்டத்துக்குப் பின், டிட்கோ அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் வழித்தடம் குறித்து ஆய்வு செய்துள்ளனர். கலெக்டரிடம் முறையிட்டு தீர்வு காண கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மற்றும் தொழில்துறை அமைச்சருக்கும் மனு அனுப்ப முடிவு செய்துள்ளோம், என்றார்.






      Dinamalar
      Follow us