sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

/

சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : ஏப் 18, 2025 11:07 PM

Google News

ADDED : ஏப் 18, 2025 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், சொட்டு நீர் பாசனம் அமைக்க தோட்டக்கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

கிணத்துக்கடவு வட்டாரத்தில் விவசாயம் சார்ந்த பகுதி அதிகம் உள்ளது. இதில், சொட்டுநீர் பாசனம் அமைக்க, 1.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 170 ஹெக்டேர் பரப்பளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதில், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியமும், மற்ற விவசாயிகளுக்கு, 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்ய, சிட்டா, ஆதார் கார்டு, அடங்கல், ரேஷன் கார்டு நகல், புகைப்படம் (மூன்று), பேங்க் பாஸ்புக் நகல், நில வரைபடம், சிறு, குறு விவசாய சான்று, எப்.எம்.பி., போன்ற ஆவணங்களை கொண்டு பதிவு செய்ய வேண்டும்.

அல்லது, தோட்டக்கலை துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். இத்தகவலை கிணத்துக்கடவு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us