sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இயற்கை விவசாய மகிமை உணர்த்திய விவசாயிகள்

/

இயற்கை விவசாய மகிமை உணர்த்திய விவசாயிகள்

இயற்கை விவசாய மகிமை உணர்த்திய விவசாயிகள்

இயற்கை விவசாய மகிமை உணர்த்திய விவசாயிகள்


ADDED : பிப் 05, 2025 11:23 PM

Google News

ADDED : பிப் 05, 2025 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இயற்கை விவசாயிகள் பல ஒன்றிணைந்து, சிவன் இயற்கை சந்தை என்ற பெயரில், பல்லடம் -- செட்டிபாளையம் ரோட்டில், கடை அமைத்து, காய்கறிகள், தானியங்களை விற்பனை செய்து வருகின்றனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கருடமுத்துாரில்விவசாயிகள்- - பொதுமக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.

இயற்கை விவசாயிகள் கூறியதாவது:

இன்றைய சூழலில், பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லாமல் விவசாயமே இல்லை என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், இயற்கை விவசாயத்தாலும் சாதிக்க முடியும் என்ற நோக்கத்துடன், நாங்கள் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

அடுத்த தலைமுறை, நோய் நொடிகள் இன்றி ஆரோக்கியமானதாக இருக்க செய்வது விவசாயிகளின் கையில்தான் உள்ளது. இன்று, பல்வேறு போலி விளம்பரங்களால், ஆபத்தான உணவு பொருட்கள், சமுதாயத்தை சீரழித்து வருகின்றன.

இயற்கை காய்கறிகள் மீது பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை.

நம் முன்னோர் பயன்படுத்தி வந்த எண்ணற்ற காய்கறிகள் காலப்போக்கில் காணாமலேயே போய்விட்டன. அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் --






      Dinamalar
      Follow us