sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பேரிகார்டு தடுப்புகளை தள்ளி வைப்பதால் அச்சம்

/

பேரிகார்டு தடுப்புகளை தள்ளி வைப்பதால் அச்சம்

பேரிகார்டு தடுப்புகளை தள்ளி வைப்பதால் அச்சம்

பேரிகார்டு தடுப்புகளை தள்ளி வைப்பதால் அச்சம்


ADDED : பிப் 19, 2025 09:26 PM

Google News

ADDED : பிப் 19, 2025 09:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு - வடசித்தூர் ரோட்டில் உள்ள, தடுப்புகளை நகர்த்தி வைப்பதால் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

கிணத்துக்கடவு -- வடசித்தூர் ரோட்டில், தினமும் ஏராளமானோர் வாகனங்களில் பயணம் செய்கின்றனர். இந்த ரோட்டில், லட்சுமி நகரில் உள்ள அபாயகரமான வளைவு பகுதியில், வாகன விபத்தை தடுக்க இரண்டு இடத்தில் பேரிகார்டு வைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது.

இதனால், இவ்வழியாக செல்லும் வாகனங்கள் தடுப்பு உள்ள பகுதியில் மெதுவாக சென்றன. ஆனால், தற்போது இரவு நேரத்தில் வரும் கனரக வாகன ஓட்டுநர்கள் சிலர், இந்த தடுப்புகளை ரோட்டின் ஓரத்தில் நகர்த்தி வைத்து விட்டு செல்கின்றனர்.

இச்செயலால், இந்த ரோட்டில் செல்லும் மற்ற வாகன ஓட்டுநர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி இங்கு மீண்டும் நகர்த்த முடியாத படி தடுப்புகள் அமைக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us