/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீரமாச்சியம்மன் கோவிலில் திருவிழா
/
வீரமாச்சியம்மன் கோவிலில் திருவிழா
ADDED : நவ 12, 2025 11:24 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு வீரமாச்சி அம்மன் கோவிலில் திருவிழாவில், அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது.
கிணத்துக்கடவு, தேரோடும் வீதி, வீரமாச்சியம்மன், கணபதி, கருப்பராயன், கன்னிமார் சுவாமி கோவிலில், திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த, 9ம் தேதியன்று, தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
கடந்த, 10ம் தேதி, கணபதி ஹோமம், பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. இதைத் தொடர்ந்து வள்ளி கும்மி நிகழ்ச்சி நடந்தது. 11ம் தேதி, சக்தி கரகம் மற்றும் தீர்த்தம் ஆற்றில் இருந்து அழைத்துவரப்பட்டது.
நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை 10:00 மணிக்கு, மஞ்சள் நீராடல் நடக்கிறது. வரும், 15ம் தேதி, மாலை 5:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடக்கிறது.

