sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை *இறைச்சி கொண்டு வர தடை

/

 கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை *இறைச்சி கொண்டு வர தடை

 கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை *இறைச்சி கொண்டு வர தடை

 கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை *இறைச்சி கொண்டு வர தடை


ADDED : டிச 29, 2025 05:30 AM

Google News

ADDED : டிச 29, 2025 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: -: காரமடையில் உள்ள கேரள மாநில எல்லை பகுதியான கோபனாரி, முள்ளியில் 'பறவை' காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. கேரளா மாநில வாகனங்களில் வரும் நபர்களுக்கு, காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.

கேரளாவில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இக்காய்ச்சல் மனிதர்கள் மற்றும் கோழிகளுக்கு பரவாமல் இருக்க, கேரள எல்லையில் உள்ள தமிழக பகுதிகளில், சுகாதாரத் துறை அதிகாரிகளால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, காரமடை அருகே உள்ள கேரள மாநில எல்லைப் பகுதியான கோபனாரி மற்றும் முள்ளியில், சுகாதாரத் துறை மருத்துவ குழுவினருடன் முகாமிட்டுள்ளனர்.

இவர்கள் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி, காய்ச்சல் பரிசோதனை செய்கின்றனர். அப்படி இருந்தால்,அந்த காய்ச்சல் எத்தனை நாட்கள் உள்ளது, இருமல் உள்ளதா, தொண்டை வலி உள்ளதா எனவும் பரிசோதனை செய்கிறார்கள்.

காரமடை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் லோகநாதன் கூறுகையில், காய்ச்சல் இருப்பின் அவர்களது விவரங்கள் சேகரிக்கப்பட்டு, உடனடியாக அவர்கள் அருகில் உள்ள வெள்ளியங்காடு அல்லது சீலியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். கேரளாவில் இருந்து இறைச்சி கொண்டு வரக்கூடாது. கொண்டு வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது, என்றார்.

மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை வட்டாரத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டு, அங்கு காய்ச்சலுடன் வரும் நோயாளிகள் தீவிரமாக பரிசோதனை செய்யப்படுகின்றனர்.






      Dinamalar
      Follow us