sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லுாரிகளுக்கு களப்பயணம்

/

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லுாரிகளுக்கு களப்பயணம்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லுாரிகளுக்கு களப்பயணம்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லுாரிகளுக்கு களப்பயணம்


ADDED : ஜன 21, 2024 11:54 PM

Google News

ADDED : ஜன 21, 2024 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே ஆனைமலை அரசுப்பள்ளி மாணவர்கள், 'நான் முதல்வன்' திட்டத்தின் வாயிலாக கல்லுாரிகளுக்கு களப்பயணமாக சென்றனர்.

தமிழக அரசின், 'நான் முதல்வன்' திட்டத்தின் வாயிலாக, அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் கல்லுாரி களப்பயணம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி, பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது.

ஆனைமலை ஒன்றியத்தைச்சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் பங்கேற்றனர். பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் அசோக், மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி பயில்வதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்கினர்.

மேலும், கல்லுாரியில் உள்ள ஆய்வகங்கள், சிறப்பு மையங்களை பார்வையிட்டனர். கல்லுாரியின் இயந்திரவியல் துறைத்தலைவர் சம்பத்குமார் நன்றி கூறினார்.

தொடர்ந்து, பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரி முதல்வர் முத்துக்குமரன் பங்கேற்று மாணவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.

இரண்டு கல்லுாரிகளுக்கு களப்பயணமாக ஆனைமலை, சோமந்துறை சித்துார், கோட்டூர் உள்ளிட்ட எட்டு பள்ளிகளில் இருந்து, மொத்தம், 261 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us