/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பீடிபற்ற வைக்கும் போது தீ விபத்து; ஒருவர் மரணம்
/
பீடிபற்ற வைக்கும் போது தீ விபத்து; ஒருவர் மரணம்
ADDED : ஜன 28, 2026 06:46 AM
சரவணம்பட்டி: கணபதியை சேர்ந்தவர் மகேந்திரன், 50. மனைவி ஹேமசந்திரா, 49. நேற்று முன்தினம், வீட்டின் முன் அமர்ந்திருந்த மகேந்திரனின் அலறல் சத்தம் கேட்டு, ஓடி வந்த ஹேமசந்திரா, மகேந்திரனின் சட்டையில் தீப்பிடித்து எரிவதை கண்டார்.
உடனடியாக பெட்ஷீட்டை அவர் மீது போட்டு, தீயை அணைக்க முயன்றார். மகேந்திரன் பாலியஸ்டர் சட்டை அணிந்து இருந்ததால், தீ வேகமாக பரவியது. மார்பு, கழுத்தில் தீக்காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் உதவியுடன், அவரை கோவை அரசு மருத்துவமனையில் ஹேமசந்திரா சேர்த்தார். சிகிச்சை பலனின்றி மகேந்திரன் உயிரிழந்தார்.
சரவணம்பட்டி போலீசார் விசாரணையில் வீட்டின் முன் அமர்ந்திருந்த மகேந்திரன், பீடி பற்ற வைப்பதற்காக தீப்பெட்டி பயன்படுத்தியதும், அப்போது சட்டையில் தீப்பற்றியதும் தெரிந்தது.

