sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பட்டாசு வெடிப்பு பேட்டி(ரூரல்)

/

பட்டாசு வெடிப்பு பேட்டி(ரூரல்)

பட்டாசு வெடிப்பு பேட்டி(ரூரல்)

பட்டாசு வெடிப்பு பேட்டி(ரூரல்)


ADDED : அக் 21, 2025 11:30 PM

Google News

ADDED : அக் 21, 2025 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

---

'கட்டுப்பாடு கூடாது' ஆண்டுக்கு ஒரு முறை தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கப்படுகிறது. அதற்கு கட்டுப்பாடு விதிப்பது தேவையற்றது. விதிமீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்றால் எத்தனை பேர் மீது எடுக்க முடியும்? கட்டுப்பாட்டை ரத்து செய்ய வேண்டும். - ரவிக்குமார் சூலூர்.

'பசுமை பட்டாசு ஓகே' சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத, பசுமை பட்டாசு வெடிக்கலாம். அதிக ஒலி, ஒளி எழுப்பும் பட்டாசு தவிர்ப்பது நல்லது. சுற்றுச்சூழல், மாசு, விலங்குகள் குறிப்பாக, வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை, கால்நடைகள் பாதிக்காத வகையில் வெடிக்கலாம். - சகாதேவன் பெரியநாயக்கன்பாளையம்.

'கட்டுப்பாடு தேவை' பட்டாசு வெடிப்பதை ஒரு சிலர் சுற்றுச்சூழலுக்கு பாதகம் என்கின்றனர். வேறு சிலர் அது நம் பாரம்பரியத்தின் அடையாளம் என்கின்றனர். மருத்துவமனைகள், வன எல்லை, விலங்குகள் பராமரிக்கும் மையம் ஆகியவற்றின் அருகே, பட்டாசு வெடிக்க தடை விதிக்கலாம். - கவிரத்னா பெரியநாயக்கன்பாளையம்.

'எந்த பாதிப்பும் இல்லை' தீபாவளியன்று ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை. நம் பாரம்பரியம், கலாசாரத்துடன் இணைந்து தீய எண்ணங்களை பொசுக்கி, நல்ல எண்ணங்களை மேம்பட செய்ய வேண்டும் என்பதே, இதன் நோக்கம். -காயத்ரி பிள்ளையப்பம்பாளையம்

'அச்சமடைந்த மாடுகள்' தீபாவளிக்கு முந்தைய நாள் மாலை துவங்கி, மறுநாள் நள்ளிரவு வரை பட்டாசு சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. இதனால் கறவை மாடுகளும் அச்சத்திற்கு உள்ளாகின. குறிப்பிட்ட நேரம் மட்டும் வெடிக்க வேண்டும் என்கிற விதிமுறையை பின்பற்றினால் நல்லது. -திவ்யா கவுண்டம்பாளையம்.






      Dinamalar
      Follow us