ADDED : நவ 05, 2025 08:20 PM

அ நிறம் | அளவு
கோவை: கே.எம்.சி.எச். இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில், 2025ம் கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
நர்சிங், பார்மசி, பிசியோதெரபி மற்றும் ஆக்குபேஷனல் தெரபி பிரிவுகளில், 900 மாணவர்கள் புதிய கல்வியாண்டில் இணைந்துள்ளனர்.
விழாவுக்கு, கே.எம்.சி.எச். மற்றும் டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமி தலைமை வகித்தார்.
அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் தவமணி தேவி, அறங்காவலர்கள் டாக்டர் அருண் மற்றும் மதுரா, முதன்மைச் செயல் அலுவலர் டாக்டர் புவனேஸ்வரன், தலைமைச் செயல் அலுவலர் டாக்டர் நடேசன் மற்றும் அனைத்து கல்லுாரிகளின் முதல்வர்கள், இயக்குனர்கள் பங்கேற்றனர்.
