sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பாலாற்றில் வெள்ளப்பெருக்கு; கோவிலுக்கு செல்ல தடை

/

 பாலாற்றில் வெள்ளப்பெருக்கு; கோவிலுக்கு செல்ல தடை

 பாலாற்றில் வெள்ளப்பெருக்கு; கோவிலுக்கு செல்ல தடை

 பாலாற்றில் வெள்ளப்பெருக்கு; கோவிலுக்கு செல்ல தடை


UPDATED : டிச 05, 2025 09:03 AM

ADDED : டிச 05, 2025 08:35 AM

Google News

UPDATED : டிச 05, 2025 09:03 AM ADDED : டிச 05, 2025 08:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை: ஆனைமலை அருகே, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

பொள்ளாச்சி அருகே, பிரசித்தி பெற்ற பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. உள்ளூர் மட்டுமின்றி, வெளியூரில் இருந்தும் பொதுமக்கள் கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர்.

பாலாற்றின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோவிலை, மழை காலங்களில் வெள்ளம் சூழ்ந்து விடுவது வழக்கமாக உள்ளது.இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்வதாலும், சிற்றோடைகள் வழியாகவும் நீர் வரத்து அதிகரிப்பால், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், பாலாறு ஆஞ்சநேயர் கோவில் செல்லும் வழியில் உள்ள, தரை மட்ட பாலத்தின் மீது நேற்றுதண்ணீர் அதிகளவு சென்றது. இதையடுத்து, பக்தர்கள் நலன் கருதி கோவில் நிர்வாகம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல தடை விதித்துள்ளது. நீர்வரத்து குறைந்ததும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும், என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us