ADDED : செப் 14, 2025 01:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;எஸ்.என்.எஸ்.பொறியியல் கல்லுாரியில், நிறுவனர் தினத்தை முன்னிட்டு, மூத்த குடிமக்களை கவுரவிக்கும் வகையில், பாத பூஜை நிகழ்வு நடந்தது.
தாத்தா-பாட்டிகளின் அர்ப்பணிப்பை போற்றும் வகையில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து, இந்த நிகழ்ச்சியை நடத்தினர்.
நிகழ்வில், மாணவர்கள் பெரியவர்களின் பாதங்களுக்கு பூஜை செய்து ஆசி பெற்றனர். 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மூத்தோர் மீது அன்பும் மரியாதையும் செலுத்தும் பாரம்பரியத்தைப் பின்பற்றினர்.