தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கட்டாய திருமணம் செய்து வைத்தவர் கைது 

கட்டாய திருமணம் செய்து வைத்தவர் கைது 

கட்டாய திருமணம் செய்து வைத்தவர் கைது 


ADDED : செப் 03, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, கட்டாய திருமணம் செய்து வைத்த நபரை, கோமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

கோமங்கலம் போலீசார் கூறியதாவது:

பொள்ளாச்சி அருகே கோமங்கலம்புதுாரை சேர்ந்த அருண்பிரசாத்,35, என்பவர், 18 வயது பெண்ணை, 19 வயது ஆண் திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தியதாகவும், திருமணம் செய்து கொள்ளாவிட்டால், போக்சோ வழக்கில் கைது செய்வதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

மேலும், புகார் அளிக்காமல்  இருக்க, இரண்டு லட்சம் ரூபாய் பணம் பெற்றதாக தெரிகிறது. பின்னர், 19 வயது ஆணை அடைத்து வைத்து, கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளார். இது குறித்து, பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரின் பேரில், கட்டாய திருமணம் செய்து வைத்தல், அடைத்து வைத்தல், மிரட்டி பணம் பறிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் அருண் பிரசாத் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு, கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us