sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வெள்ளியங்கிரிக்கு பிப்., 1 முதல் செல்லலாம் பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி

/

வெள்ளியங்கிரிக்கு பிப்., 1 முதல் செல்லலாம் பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி

வெள்ளியங்கிரிக்கு பிப்., 1 முதல் செல்லலாம் பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி

வெள்ளியங்கிரிக்கு பிப்., 1 முதல் செல்லலாம் பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி


ADDED : ஜன 28, 2025 07:27 AM

Google News

ADDED : ஜன 28, 2025 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : மகா சிவராத்திரியை முன்னிட்டு, வெள்ளியங்கிரி மலைக்கு பிப்., 1 முதல் பக்தர்கள் செல்லலாம் என, வனத்துறை அறிவித்துள்ளது.

வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்ல கடந்த ஆண்டுகளில், மார்ச் முதல், மே வரை வனத்துறை அனுமதி வழங்கி வந்தது.

கடந்தாண்டு, தரிசனத்துக்காக பிப்., 1 முதல் அனுமதிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். வனத்துறையினர் மறுத்தனர். பக்தர்கள் உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தனர். பக்தர்களை அனுமதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்போது வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல, பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. வரும், பிப்., 1ம் தேதி முதல் மே மாத இறுதி வரை, பக்தர்கள் வெள்ளியங்கிரிக்கு செல்லலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், ''நீதிமன்ற உத்தரவின்படி, பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல, பிப்., 1 முதல் மே இறுதி வரை அனுமதி அளிக்கப்படுகிறது. மலைப்பாதை பல இடங்களில் செங்குத்தாக அமைந்துள்ளதால், ஆரோக்கியமான உடல் நலம் உள்ளவர்கள் மட்டும் சென்று வர, கேட்டு கொள்ளப்படுகிறது.

வனத்துறை களப்பணியாளர்கள், உள்ளூர் சூழல் ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து, பக்தர்களை ஒழுங்குபடுத்தவும், பிளாஸ்டிக் பைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் குறித்து பரிசோதிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள், சிகரெட், பீடி போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டாம். குப்பைகளை வனப் பகுதியில் வீச வேண்டாம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us