sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரோட்டில் சிங்கவால் குரங்குகள் நடமாட்டம் சுற்றுலா பயணியருக்கு வனத்துறை அறிவுரை

/

ரோட்டில் சிங்கவால் குரங்குகள் நடமாட்டம் சுற்றுலா பயணியருக்கு வனத்துறை அறிவுரை

ரோட்டில் சிங்கவால் குரங்குகள் நடமாட்டம் சுற்றுலா பயணியருக்கு வனத்துறை அறிவுரை

ரோட்டில் சிங்கவால் குரங்குகள் நடமாட்டம் சுற்றுலா பயணியருக்கு வனத்துறை அறிவுரை


ADDED : டிச 23, 2024 05:05 AM

Google News

ADDED : டிச 23, 2024 05:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : வால்பாறையில், சிங்கவால்குரங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் சுற்றலா பயணியர் மிகவும் கவனமாக வானங்களை இயக்க வேண்டும் என, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் வால்பாறை அமைந்துள்ளது. இங்குள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரண்டு வனச்சரகங்களிலும், வரையாடு, சிங்கவால்குரங்குகள் அதிக அளவில் உள்ளன.

இந்நிலையில், வால்பாறை புதுத்தோட்டம் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் உள்ளன. மிகவும் கூச்ச சுபாவமுடைய இந்த வகை குரங்குகள் வனத்தில் கிடைக்கும் பழங்களை உணவாக உட்கொள்கின்றன.

சிங்கவால்குரங்குகள் ரோட்டில் துள்ளி விளையாடுவதை தவிர்க்க, வனத்துறை சார்பில் ஐந்து இடங்களில் ஊஞ்சல் கட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இவை சில நேரங்களில் ஆபத்தை உணராமல் ரோட்டில், விளையாடுவதும், குடியிருப்பு பகுதிக்குள் சென்று உணவு தேடுவதும் வாடிக்கையாகிவிட்டது.

வால்பாறையில் தற்போது பருவமழைக்கு பின் குளுகுளு சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணியர் அதிக அளவில் வரத்துவங்கியுள்ளனர்.

வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறையில், பருவமழைக்கு பின் வனவளம் செழிப்பாக உள்ளது. வனவிலங்குகளுக்கு தேவையான உணவு, குடிநீர் போதுமான அளவு கிடைக்கிறது. பொள்ளாச்சி ரோட்டில் சிங்கவால் குரங்குகள் அதிக அளவில் நடமாடுவதால், இந்தப்பகுதியில் சுற்றுலா பயணியர் வாகனங்களை மிக கவனமாக இயக்க வேண்டும்.

குடியிருப்பு பகுதிக்குள் வரும் சிங்கவால் குரங்குகளுக்கு பொதுமக்கள் உணவு வழங்க வேண்டாம். உணவு வழங்குவதால், இயற்கையாக உணவு தேடும் அவற்றின் இயல்பு மாறி விடும். வனத்துறை எச்சரிக்கையை மீறினால் வன உயிரினபாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, கூறினர்.

'ட்ரோன்' கேமராவுக்கு தடை!

வால்பாறையில், யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள், பசுமை மாறாக்காடுகள், தேயிலை தோட்டங்கள் நிறைந்துள்ளன. வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர் வனப்பகுதிக்குள் அத்துமீறி செல்வதை தவிர்க்க வேண்டும்.வன விலங்குகளின் அருகில் சென்று 'செல்பி' எடுப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில் 'ட்ரோன்' கேமரா பயன்படுத்தவும், அதன் வாயிலாக படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் 'ட்ரோன்' கேமரா பறிமுதல் செய்வதோடு, அபராதமும் விதிக்கப்படும், என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.








      Dinamalar
      Follow us