/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் காலமானார்
/
அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் காலமானார்
ADDED : அக் 10, 2025 10:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை; வால்பாறை சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் வள்ளிக்கண்ணு,78, உடல்நலக்குறைவால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் வால்பாறை திருமண மண்டபத்தில், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது மனைவி பழனியம்மாள், மகன் சரவணன், மகள்கள் புஷ்பவள்ளி, கவிதா ஆகியோருக்கு முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து, உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மாலையில், வால்பாறை மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.