sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சுங்கத்துறையினர் பறிமுதல் செய்த  தங்கத்தை மீட்டு தருவதாக மோசடி

/

சுங்கத்துறையினர் பறிமுதல் செய்த  தங்கத்தை மீட்டு தருவதாக மோசடி

சுங்கத்துறையினர் பறிமுதல் செய்த  தங்கத்தை மீட்டு தருவதாக மோசடி

சுங்கத்துறையினர் பறிமுதல் செய்த  தங்கத்தை மீட்டு தருவதாக மோசடி


ADDED : செப் 21, 2024 02:36 AM

Google News

ADDED : செப் 21, 2024 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அப்துல் ரகுமான், 37. மலேஷியாவில் உள்ள நகைக்கடையில் பணியாற்றுகிறார். இவர் மார்ச் மாதம், மலேஷியாவில் இருந்து கோவை வந்த தன் சகோதரி ரஜீனாவிடம். 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொடுத்து அனுப்பினார்.

கோவை ஏர்போர்ட்டில் ரஜீனாவின் உடைமைகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது, அவர் எடுத்து வந்த, 30 லட்சம் ரூபாய் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், ரஜீனாவிற்கு கோவை காளப்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் அறிமுகமானார்.

அவர் ரஜீனாவிடம், தனக்கு கோவை விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது; அவர்களிடம் இருந்து நகைகளை, மீட்டு தர உதவுவதாக தெரிவித்தார். இதற்காக பலருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றார்.

இதை நம்பிய ரஜீனா, 9.50 லட்சம் ரூபாயை, பாலகிருஷ்ணனிடம் கொடுத்தார்.

ஆனால் அவர் சொன்ன படி நகைகளை மீட்டு தரவில்லை.

ரஜீனா இது குறித்து, தன் சகோதரர் அப்துல் ரகுமானிடம் தெரிவித்தார். ரகுமான் நேற்று, கோவை பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us