sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரூ.150 கோடி வரை மோசடி; கமிஷனர் அலுவலகத்தில் புகார்

/

ரூ.150 கோடி வரை மோசடி; கமிஷனர் அலுவலகத்தில் புகார்

ரூ.150 கோடி வரை மோசடி; கமிஷனர் அலுவலகத்தில் புகார்

ரூ.150 கோடி வரை மோசடி; கமிஷனர் அலுவலகத்தில் புகார்


ADDED : அக் 08, 2025 11:33 PM

Google News

ADDED : அக் 08, 2025 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று காலை 50க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர். அதில், பணம் டெபாசிட் செய்தால் ஒரு மாதத்தில் இரட்டித்து தருவதாக க்ரோகர் எக்சேன்ஜ், வெல்த் வின் வின் பண்ட் நிறுவனத்தின், ஹேமன் பாஸ்கர் உள்ளிட்டோர் மோசடி செய்ததாகவும், மாநிலம் முழுவதும், 5,000க்கும் மேற்பட்டோர் ரூ.150 கோடி வரை முதலீடு செய்துள்ளதாகவும், அப்பணம் முழுவதையும் மோசடி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:

க்ரோகர் எக்சேன்ஜ், வெல்த் வின் வின் பண்ட் ஆன்லைன் கிரிப்டோ கரன்ஸி நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாக, ஜூம் மீட்டிங் மூலம் தெரிவித்தனர்.

நிறுவனத்தின் ஹேமன் பாஸ்கர் உள்ளிட்ட, 27 பேர் பேசினர். 2,500 டாலர் மதிப்பில் பணம் செலுத்தினால், 5,000 டாலர், 3,000 டாலர் மதிப்பிலான பணத்தை செலுத்தினால், 6,000 டாலர் என தெரிவித்தனர். பணத்துடன் தங்க நகைகள் தருவதாகவும் தெரிவித்தனர்.

இதை நம்பி தமிழகம் முழுவதும், 5,000க்கும் மேற்பட்டோர், ரூ.150 கோடி வரை முதலீடு செய்தனர். பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள், தராமல் ஏமாற்றி வருகின்றனர்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us