/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.எம்.சி.எச்.ல் புற்றுநோயாளிக்கு இலவச மறு ஆலோசனை முகாம்
/
கே.எம்.சி.எச்.ல் புற்றுநோயாளிக்கு இலவச மறு ஆலோசனை முகாம்
கே.எம்.சி.எச்.ல் புற்றுநோயாளிக்கு இலவச மறு ஆலோசனை முகாம்
கே.எம்.சி.எச்.ல் புற்றுநோயாளிக்கு இலவச மறு ஆலோசனை முகாம்
ADDED : நவ 28, 2025 03:04 AM
அ விநாசி ரோட்டில் உள்ள கோயம்புத்துார் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இலவசமாக மறு ஆலோசனை வழங்கும் முகாம், டிச. 1 ல் துவங்கி, 31ம் தேதி வரை நடக்கிறது.
கே.எம்.சி.எச். நிர்வாகத்தினர் கூறியதாவது:
புற்றுநோய் அறிகுறி இருப்பது தெரிந்தவுடன் இது ஏன், எப்படி, எதனால் வந்தது என்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம்.
இந்த முயற்சி பல வகைகளில் இருக்கலாம். மருத்துவர், புற்றுநோய் பாதிப்பு உள்ளது என தெரிவித்தால், அதற்கான சான்று சரியானதா என்பதை அறிந்து கொள்ள இன்டர்நெட்டில் தேடுகின்றனர்.
இதில் அளிக்கப்படும் பல்வேறு பதில்கள், விளக்கங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான புற்றுநோய், இருக்கலாம். அவற்றுக்கு ஒரே மாதிரியான விளக்கங்கள் பொருந்தாது.
புற்றுநோய் பாதிப்பு உள்ளது என, மருத்துவர் கூறினாலும், மற்றொரு மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.
இது புற்றுநோய்க்கு மட்டுமல்ல, வேறு எந்த நோய்க்கும் இது பொருந்தும். அறுவை சிகிச்சைக்கு முன் இரண்டாவது ஒரு மருத்துவரிடம் ஆலோசிப்பதில் தவறில்லை.
இதுபோன்றே புற்றுநோய் உள்ளதா, இல்லையா, சரியான சிகிச்சை என்ன என்பதை அறியவும், எந்த மருத்துவமனைக்கு செல்வது, எந்த டாக்டரை பார்ப்பது, எவ்வளவு செலவு ஆகும் என்பதை அறியவும், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், இரண்டாவது ஆலோசனை இலவசமாக வழங்கப்படுகிறது.
இங்கு மேற்கொண்டு பரிசோதனை செய்யவேண்டிய அவசியம் இருந்தால், அதை சலுகை கட்டணத்தில் செய்து கொள்ளலாம்.
இதற்கான முகாம், அவிநாசி ரோட்டில் உள்ள கே.எம்.சி.எச்.ல் டிசம்பர் 1ம் தேதி துவங்குகிறது; டிசம்பர் 31ம் தேதி வரை தினமும் காலை 9 முதல் மதியம் 3 மணி நடக்கும் இம்முகாமில், இலவசமாக இரண்டாவது ஆலோசனை வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு, 87548 -87568 மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

