/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடந்த வார விலையை விட இளநீர் ரூ.1 உயர்வு
/
கடந்த வார விலையை விட இளநீர் ரூ.1 உயர்வு
ADDED : மார் 16, 2025 11:56 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில் ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, 43 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 17,000 ரூபாய். இளநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது. தற்போது, கர்நாடக மாநிலத்தில் சுமார் 3.5 லட்சம் ஏக்கரில் தென்னை மரங்கள் வெள்ளை பூச்சி தாக்குதலால் பாதிப்படைந்துள்ளன.
இதன் காரணமாக கர்நாடகாவில் மத்துார், சாம்ராஜ்பேட்டை மற்றும் கே.ஆர்., பேட் சந்தைகளில் இளநீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது. தரமும் சுமாராக உள்ளது. எனவே, அவசரப்படாமல் இளநீரை நல்ல விலைக்கு விற்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.