/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் வீதியெங்கும் தேங்கியது குப்பை: 40 சதவீத துாய்மை பணியாளர்கள் 'ஆப்சென்ட்'
/
கோவையில் வீதியெங்கும் தேங்கியது குப்பை: 40 சதவீத துாய்மை பணியாளர்கள் 'ஆப்சென்ட்'
கோவையில் வீதியெங்கும் தேங்கியது குப்பை: 40 சதவீத துாய்மை பணியாளர்கள் 'ஆப்சென்ட்'
கோவையில் வீதியெங்கும் தேங்கியது குப்பை: 40 சதவீத துாய்மை பணியாளர்கள் 'ஆப்சென்ட்'
ADDED : அக் 21, 2025 11:36 PM

கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் நாளொன்றுக்கு, 1,000 முதல் 1,250 டன் வரை குப்பை சேகரமாகும். தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதால், அவற்றை அகற்ற, கூடுதலாக, 30 டிரிப் வாகனங்கள் இயக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. 2,000 டன் குப்பை சேகரமாகலாம் என, சுகாதாரப் பிரிவினர் எதிர்பார்த்தனர்.
பண்டிகைக்கு முந்தைய நாள் ஞாயிற்றுக்கிழமை, துாய்மை பணியாளர்கள் பணிபுரிந்ததால், நேற்று (செவ்வாய்க்கிழமை) 40 சதவீத தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை. 60 சதவீத தொழிலாளர்களே வந்திருந்ததால், 550 டன் குப்பையே சேகரிக்க முடிந்தது. லாரி டிரைவர்களும் வராததால், வெள்ளலுார் கிடங்கிற்கு எடுத்துச் செல்ல முடியவில்லை.
அதனால், வார்டுகளில் வீதியெங்கும் மூட்டை மூட்டையாக குப்பை தேங்கியது. பட்டாசு வெடித்த குப்பையும் ஆங்காங்கே பரவிக் கிடந்தது. சாரல் மழை துாறிக் கொண்டே இருந்ததால், குப்பை நனைந்து துர்நாற்றம் வீசியது. பண்டிகை கொண்டாட்டத்தால், வீட்டில் உருவான குப்பையை சாக்கு ப் பையில் கட்டி வீதிகளில் பொது இடத்தில் மக்கள் வைத்துச் சென்றுள்ளனர். அதனால், எந்த வீதிக்குச் சென்றாலும் பொது இடங்களில் குப்பை தேக்கத்தை காண முடிந்தது.
தொழிலாளர்கள் குவித்து வைத்திருந்த, குப்பையை எடுத்துச் செல்ல வாகனங்கள் வராததால், ரோட்டின் ஓரத்தில் வைத்து விட்டுச் சென்றனர்.
'550 டன் குப்பை
சேகரமானது'
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''60 சதவீத துாய்மை பணியாளர்களே பணிக்கு வந்திருந்தனர். 550 டன் குப்பை சேகரமானது. இரவு பணியில், 300 டன் சேகரிக்க உள்ளோம். பட்டாசு குப்பை மட்டும் 500 டன் சேகரமாகும் என நினைக்கிறோம்,'' என்றார்.