sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சமைக்கும் போது காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் பரபரப்பு

சமைக்கும் போது காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் பரபரப்பு

சமைக்கும் போது காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் பரபரப்பு


ADDED : அக் 06, 2025 07:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 06, 2025 07:28 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கோவை கிணத்துக்கடவு, மணிகண்டபுரத்தில் வீட்டில் சமைக்கும் போது காஸ் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு, மணிகண்டபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 53, பேக்கரி நடத்தி வருகிறார். இவரது மனைவி லோகேஸ்வரி, 49.

இவர் வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த போது, சிலிண்டரில் காஸ் கசிவு ஏற்பட்டது. இதைக் கண்ட லோகேஸ்வரி, சுதாரித்துக் கொண்டு வெளியேறினார்.

தொடர்ந்து காஸ் கசிவு ஏற்பட்ட சிலிண்டரில் தீப்பிடித்து எரிந்து, அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில், வீட்டிலிருந்த பிரிட்ஜ், 'டிவி', ஏசி உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரிக் சாதனங்கள் மற்றும் வீட்டில் இருந்த இதர பொருட்கள், ஜன்னல்கள் என அனைத்தும் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதங்கள் ஏற்படவில்லை.

இதைத்தொடர்ந்து அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள், தீயணைப்புத் துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பாய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

போலீசார், வீட்டில் சேதமடைந்த பகுதி மற்றும் எலக்ட்ரிக் சாதனங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us