sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரவுடிகளுக்கு 'கெட் அவுட்'; அடுத்த பட்டியல் தயார்

/

ரவுடிகளுக்கு 'கெட் அவுட்'; அடுத்த பட்டியல் தயார்

ரவுடிகளுக்கு 'கெட் அவுட்'; அடுத்த பட்டியல் தயார்

ரவுடிகளுக்கு 'கெட் அவுட்'; அடுத்த பட்டியல் தயார்


ADDED : மார் 29, 2025 05:44 AM

Google News

ADDED : மார் 29, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : மாநகரில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை, மாநகரில் இருந்து வெளியேற்றும் வகையில், 25 பேர் கொண்ட 'லிஸ்ட்' தயார் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகர பகுதிகளில், குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு, பொது அமைதியை கெடுக்கும் வகையில் செயல்பட்டு வரும் ரவுடிகளை, சென்னை சிட்டி போலீஸ் சட்டத்தின் கீழ் வெளியேற்ற, போலீஸ் கமிஷனர் திட்டமிட்டு, தற்போது வரை 110 பேர் மாநகரில் இருந்து வெளியேற உத்தரவு பிறபித்துள்ளார்.

இந்த உத்தரவை மீறி, மாநகருக்குள் வருவோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். உத்தரவை மீறி உயர் நீதிமன்றத்தில் இருவர் தாக்கல் செய்த மனுவை, நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

உத்தரவை மீறி சிட்டிக்குள் வந்த, 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில், பீர் முகமது, அருண் ஹாசன் மற்றும் லோகேஸ்வரன் ஆகியோரை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

அடுத்த கட்டமாக மேலும் 25 பேர் கண்டறியப்பட்டு மாநகரை விட்டு வெளியே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us