sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சந்தையில் ஆடு விற்பனை மந்தம் நினைச்ச விலை கிடைக்கலீங்க!

/

சந்தையில் ஆடு விற்பனை மந்தம் நினைச்ச விலை கிடைக்கலீங்க!

சந்தையில் ஆடு விற்பனை மந்தம் நினைச்ச விலை கிடைக்கலீங்க!

சந்தையில் ஆடு விற்பனை மந்தம் நினைச்ச விலை கிடைக்கலீங்க!


ADDED : செப் 27, 2024 11:18 PM

Google News

ADDED : செப் 27, 2024 11:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: புரட்டாசி மாதம் காரணமாக,பொள்ளாச்சி சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஆடுகள், குறைந்த விலைக்கு ஏலம் போனதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில், வாரந்தோறும் வியாழக்கிழமை மாடு மற்றும் ஆட்டுச் சந்தை நடக்கிறது. அதன்படி, பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஆடுகள், நேற்று முன்தினம் ஏலம் விடப்பட்டது.

ஆடுகளை வாங்க உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நேற்று, வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகள் கொண்டு வரப்பட்டன. புரட்டாசி மாதம் என்பதால், கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் ஆடுகள் வரத்து குறைவாகவே இருந்தது. வியாபாரிகள் வருகையும் குறைந்ததால், ஆடுகளுக்கு குறைந்த விலை நிர்ணயம் செய்து வாங்கி சென்றனர்.

வியாபாரிகள் கூறியதாவது: இரு வாரத்துக்கு முன், 12 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு, 8 ஆயிரம் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரையிலும்; 25 கிலோ எடை கொண்ட ஆடு, 20 ஆயிரம் முதல், 22 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனையானது.

ஆனால், நேற்று, மந்தமான விற்பனை காரணமாக, 25 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு 15 ஆயிரம் முதல், 17 ஆயிரம் ரூபாய்; சராசரி எடை கொண்ட ஆடுகள், 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை விலையானது.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us