sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 திருப்பூரில் வணிக வரி மேல்முறையீடு அலுவலகம் அமைக்க அரசாணை வெளியீடு

/

 திருப்பூரில் வணிக வரி மேல்முறையீடு அலுவலகம் அமைக்க அரசாணை வெளியீடு

 திருப்பூரில் வணிக வரி மேல்முறையீடு அலுவலகம் அமைக்க அரசாணை வெளியீடு

 திருப்பூரில் வணிக வரி மேல்முறையீடு அலுவலகம் அமைக்க அரசாணை வெளியீடு


ADDED : நவ 12, 2025 11:08 PM

Google News

ADDED : நவ 12, 2025 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

-- நமது நிருபர் -: திருப்பூர் வணிக வரி கோட்டத்தில், மேல் முறையீட்டு அலுவலகம் உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைகள் வேகம் பெறும் என்பதால், திருப்பூர் மாவட்ட வர்த்தகர்களும், ஆடிட்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் வருவாய் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கி, மூன்று வணிகவரி மாவட்டங்களுடன், கடந்த 2024, ஜூலை மாதம் முதல், திருப்பூர் வணிக வரி கோட்டம் செயல்பட்டு வருகிறது.

வணிக வரி இணை கமிஷனர் (நிர்வாகம்), நுண்ணறிவு பிரிவு இணை கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் அலுவலகங்கள், தணிக்கை பிரிவுகளை உள்ளடக்கி, திருப்பூர் வணிக வரி கோட்ட அலுவலகம் மற்றும் மூன்று வணிக வரி மாவட்டத்துக்கான துணை கமிஷனர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

திருப்பூர் வணிக வரி கோட்டம் உருவாக்கப்பட்டபோதும், மேல்முறையீட்டு அலுவலகம் இல்லாததால், வர்த்தகர்களும், ஆடிட்டர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

வரி செலுத்தியது, ரிட்டர்ன் தாக்கல் குறைபாடுகள், நுண்ணறிவு பிரிவினரின் தணிக்கைகள் அடிப்படையில் அதிகாரிகளால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள், அபராதங்கள் தொடர்பாக மேல் முறையீடு செய்வதற்கு, திருப்பூர் மாவட்ட வர்த்தகர்கள், ஈரோடு அலுவலகத்தையே நாடவேண்டியுள்ளது.

மேல் முறையீடுகளில் காலதாமதம் ஏற்படுவதையடுத்து, திருப்பூரில் மேல் முறையீட்டு அலுவலகம் அமைக்கவேண்டும் என, வர்த்தகர்களும், ஆடிட்டர்களும், அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்நிலையில் தற்போது, திருப்பூரில் வணிக வரி மேல்முறையீட்டு அலுவலகம் அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், திருப்பூர் மாவட்ட வர்த்தகர்களும், ஆடிட்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து, திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் கூறுகையில், ''திருப்பூர், குமார் நகரிலுள்ள வணிகவரித்துறை துணை கமிஷனர் அலுவலகத்துடன் இணைந்து, மேல்முறையீட்டு அலுவலகம் இயங்க உள்ளது. துணை கமிஷனர் தலைமையில், துணை வணிக வரி அலுவலர் 2 பேர் உட்பட அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.இந்த அலுவலகத்தில், திருப்பூர் வணிக வரி கோட்டத்திலுள்ள, நிர்வாகம், நுண்ணறிவு பிரிவு சார்ந்த வழக்குகள் மட்டுமே கையாளப்படும். இதனால், வர்த்தகர்கள், அருகாமையிலும், விரைவாகவும் மேல்முறையீடு செய்யமுடியும்; வழக்கு விசாரணைகள் துரிதமாக நடைபெற்று, வர்த்தகர்களுக்கு உரிய இழப்பீடுகள் அல்லது அரசுக்கு வருவாய் தாமதமின்றி கிடைக்கும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us