/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கற்பகம் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
கற்பகம் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : செப் 30, 2024 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கற்பகம் பொறியியல் கல்லுாரி, 20வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி அரங்கில் நடந்தது.
இதில், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறையின் துணைத் தலைவர் அண்ணாமலை பங்கேற்று, கல்வியின் முக்கியத்துவம், புதுமையான சிந்தனை மேம்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
நிகழ்வில், 884 மாணவர்கள் பட்டம் பெற்றனர். ஒவ்வொரு துறையிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, தங்க பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் வசந்தகுமார், சக பேராசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.