/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்வி மையங்களின் பட்டமளிப்பு விழா
/
கல்வி மையங்களின் பட்டமளிப்பு விழா
ADDED : ஜன 28, 2025 07:29 AM

பாலக்காடு : கேரள மாநிலம், பாலக்காடு கல்லேக்காடு அருகே உள்ள ஜாமியா ஹசனியா அமைப்பின் வளாகத்தில், கல்லூரிகள், கல்வி மையங்கள் செயல்படுகின்றன. இந்த அமைப்பின், 30ம் ஆண்டு விழா விமர்சையாக நடைபெற்றது.
கடந்த, 24ம் தேதி மாலை 5:00 மணிக்கு, மகாராஷ்டிரா சன்னி மத அமைப்பின் தலைவர் முப்தி மவுலானா முஜ்தபா சரீப் சாஹிப் விழாவை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், கேரளா ஹஜ் கமிட்டி தலைவர் ஹுசைன் சகாபி, கலால் துறை அமைச்சர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
நேற்று முன்தினம் நடந்த நிறைவு விழாவை, சன்னி அமைப்பின் மாநில நிர்வாகி, காந்தபுரம் அபுபக்கர் முஸ்லியார் துவக்கி வைத்தார்.
இதில், பாலக்காடு எம்.பி., ஸ்ரீகண்டன், மாராயமங்கலம் அப்துல் ரஹ்மான் பைசி, முகமது முஸ்லியார் கொம்பம், தமிழக சன்னி மத அமைப்பின் தலைவர் மன்சூர் ஹாஜி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவில், 170 மாணவர்களுக்கு பட்டமளிக்கப்பட்டது.