/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெயரளவுக்கு நடந்த கிராம சபை கூட்டங்கள்
/
பெயரளவுக்கு நடந்த கிராம சபை கூட்டங்கள்
ADDED : ஜன 27, 2026 05:05 AM
சூலூர்: குடியரசு தினத்தையொட்டி, சூலூர் வட்டாரத்தில் உள்ள, 17 ஊராட்சிகளில் நேற்று கிராம சபை கூட்டங்கள் நடந்தன.
* காங்கயம்பாளையத்தில் நடந்த கூட்டத்தில், கோயமுத்தூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வக்கீல் பிரேமலதா மற்றும் நாகராஜன் ஆகியோர், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பணிகள் குறித்து விளக்கினர்.
* கிட்டாம்பாளையத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் முன்னாள் தலைவர் சந்திரசேகர், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றக்கூடாது என, மனு அளித்தனர்.
* கரவழி மாதப்பூரில் கிராம சபை கூட்டம் நடந்ததாக அதிகாரிகள் தரப்பிலும், கோரம் இல்லாததால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக பொதுமக்களில் ஒரு தரப்பினரும் கூறியதால், குழப்பம் ஏற்பட்டது.
இதேபோல், மற்ற ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் பெயரளவுக்கு நடந்து முடிந்தது.

