sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பசுமை தீபாவளி கொண்டாட்டம் வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் மரக்கன்று நடவு

/

பசுமை தீபாவளி கொண்டாட்டம் வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் மரக்கன்று நடவு

பசுமை தீபாவளி கொண்டாட்டம் வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் மரக்கன்று நடவு

பசுமை தீபாவளி கொண்டாட்டம் வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் மரக்கன்று நடவு


ADDED : அக் 31, 2024 10:24 PM

Google News

ADDED : அக் 31, 2024 10:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, ; வனத்துக்குள் திருப்பூர் - 10 திட்டத்தின் கீழ், உடுமலை பகுதிகளில், 1.45 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, பசுமை வளர்க்கும் பண்டிகையாக மாறியுள்ளது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கனவுகளை நிறைவேற்றும் வகையிலும், மாவட்டத்தை பசுமையாக்கும் வகையிலும், 'வெற்றி' அமைப்பு சார்பில் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

விவசாய நிலங்கள், அரசு, உள்ளாட்சி அமைப்புகள், தனியார் நிலங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டு, 10வது திட்டத்தின் கீழ், 3 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

மாவட்டத்தில், உடுமலை பகுதி விவசாயிகள் மற்றும் பசுமை ஆர்வலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆர்வம் காரணமாக, அதிகளவு மரக்கன்றுகள் நடவு செய்து, பராமரிக்கும் பகுதியாக உடுமலை பகுதி மாறியுள்ளது.

நடப்பாண்டு மாவட்டத்தில், இது வரை, 2.25 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியில், 1.45 லட்சம் மரக்கன்றுகள் என அதிகளவு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் பட்டாசு வெடித்து கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை, மரக்கன்று வைத்து சுற்று சூழல் காக்கும் பசுமை தீபாவளியாக கொண்டாடும் வகையில், உடுமலை அருகேயுள்ள மைவாடி பிரிவு, விவசாயி மயில்சாமிக்கு சொந்தமான நிலத்தில், 10 ஆயிரம் கொய்யா நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டது.

அதே போல், உடுமலை ஒன்பதாறு செக்போஸ்ட் அருகேயுள்ள விவசாயி பொன்னுச்சாமிக்கு சொந்தமான நிலத்தில், மகாகனி, 250, தேக்கு, 100 என மொத்தம், 350 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், விவசாய நிலங்கள், அரசுக்கு சொந்தமான நிலங்களில், இலவசமாக மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது. மரக்கன்றுகள் பராமரித்து, பசுமை வளர்க்கும் ஆர்வம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்ட குழுவினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us