நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி,; பொள்ளாச்சி கோட்டத்தில், டிச., மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வரும், 21ம் தேதி, சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு சப் - கலெக்டர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர்.
விவசாயிகள் பங்கேற்று தங்களது விவசாயம் தொடர்புடைய குறைகள், கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை, சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா தெரிவித்தார்.