/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன்கடை புகார்களை கூற 25ல் குறைதீர் கூட்டம்
/
ரேஷன்கடை புகார்களை கூற 25ல் குறைதீர் கூட்டம்
ADDED : ஜன 22, 2025 12:38 AM
கோவை; ரேஷன்கார்டு மற்றும் ரேஷன்கடைகளில் உள்ள குறைகளை சரிசெய்து கொள்ள, சிறப்பு குறைதீர் கூட்டம், தாலுகா அளவிலான வட்டவழங்கல் அலுவலகங்களில் வரும் 25ல் நடக்கிறது.
கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:
பொது வினியோகத்திட்டத்தின் சேவைகளை, அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று, கோவை மாவட்டத்தில் அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் செயல்படும், வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் முகாம் நடந்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, இம்மாதம் வரும் 25ல் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை, பொதுவினியோகத்திட்ட குறைதீர் சிறப்பு முகாம், அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் இயங்கிவரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறும்.
இம்முகாமில் ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், நகல்குடும்ப அட்டை, மொபைல் எண் மாற்றம் மற்றும் குடும்ப தலைவர் போட்டோ மாற்றம் தொடர்பான குறைகளை, மனுக்களாக வழங்கி மக்கள் பயனடையலாம்.