sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போலீஸ் சோதனையில் துப்பாக்கி சிக்கியது; இருவர் கைது

/

போலீஸ் சோதனையில் துப்பாக்கி சிக்கியது; இருவர் கைது

போலீஸ் சோதனையில் துப்பாக்கி சிக்கியது; இருவர் கைது

போலீஸ் சோதனையில் துப்பாக்கி சிக்கியது; இருவர் கைது


ADDED : செப் 01, 2025 12:43 AM

Google News

ADDED : செப் 01, 2025 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; சூலுார் அருகே வீட்டில் நடத்திய சோதனையில், துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் சிக்கின. இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை, சூலுார் எஸ்.வி.எல்., நகரில், மளிகை கடை நடத்தி வரும் பெண்ணிடம், இரு நாட்களுக்கு முன், நான்கு சவரன் நகை பறித்து இரு வாலிபர்கள் தப்பி சென்றனர். இதுகுறித்து சூலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் பதிவை கொண்டு, இரு நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்கள், ஆந்திராவை சேர்ந்த ராஜசேகரன், பீகாரை சேர்ந்த விஜயகுமார் சோனி என்பது தெரிந்தது. ராசிபாளையத்தில் தங்கி கட்டட வேலைக்கு சென்று வந்தது தெரிந்தது. அவர்களின் வீட்டுக்கு சென்று போலீசார் சோதனை நடத்தியதில், ஒரு துப்பாக்கி மற்றும் 15 க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் சிக்கின. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இந்த துப்பாக்கிகளை யாரிடம் வாங்கினர், எதற்காக வாங்கினர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us