sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பயணியின் ஷூவில் துப்பாக்கி குண்டு; கோவை விமான நிலையத்தில் பரபரப்பு

/

பயணியின் ஷூவில் துப்பாக்கி குண்டு; கோவை விமான நிலையத்தில் பரபரப்பு

பயணியின் ஷூவில் துப்பாக்கி குண்டு; கோவை விமான நிலையத்தில் பரபரப்பு

பயணியின் ஷூவில் துப்பாக்கி குண்டு; கோவை விமான நிலையத்தில் பரபரப்பு


ADDED : ஜூன் 16, 2025 12:09 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 12:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை விமான நிலையத்தில் இரண்டாம் நாளாக, பயணியிடமிருந்து துப்பாக்கி குண்டு பறிமுதல் செய்யப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று மதியம், அபுதாபியில் இருந்து இண்டிகோ விமானம், கோவை வந்தது. பயணிகளின் உடமைகளை, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர்(சி.ஐ.எஸ்.எப்.,) சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவரின் ஷூவில், 22 மி.மீ., அளவுள்ள துப்பாக்கி குண்டு இருந்தது.

விசாரணையில், அவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ஷிபு மேத்யூ, 48 என்பதும் துபாயில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனத்தில், 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதும் தெரிந்தது.

இதையடுத்து, சி.ஐ.எஸ்.எப்., போலீசார் அவரை, கோவை பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில், தனக்கு துப்பாக்கி லைசென்ஸ் இல்லை என்றும் ஷூவில் துப்பாக்கி குண்டு எப்படி வந்தது எனத் தெரியவில்லை என்றும், ஷிபு மேத்யூ தெரிவித்துள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us