sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் மகிழ்ச்சி

/

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் மகிழ்ச்சி

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் மகிழ்ச்சி

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் மகிழ்ச்சி


ADDED : அக் 08, 2024 11:43 PM

Google News

ADDED : அக் 08, 2024 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: வால்பாறையில் கடந்த நான்கு மாதங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையினால், பி.ஏ.பி., பாசன திட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை விடைபெற்ற நிலையில், வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்கிறது.

வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் இடியுடன் கனமழை பெய்வதால், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை,158.21 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 491 கனஅடி தண்ணீர் வரத்தாக இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு, 4,202 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 70.20 அடியாக உயர்ந்தது.

நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,) வருமாறு:

வால்பாறை - 32, சோலையாறு - 43, பரம்பிக்குளம் - 37, ஆழியாறு - 7, மேல்நீராறு - 30, கீழ்நிராறு - 9, காடம்பாறை - 37, மேல்ஆழியாறு - 19, சர்க்கார்பதி - 17, துணக்கடவு - 19, வேட்டைக்காரன்புதுார் - 12, மணக்கடவு - 16, துணக்கடவு - 5, பெருவாரிப்பள்ளம் - 18, பொள்ளாச்சி - 5 என்ற அளவில் மழை பெய்தது.






      Dinamalar
      Follow us