/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை அரசு மருத்துவமனையில்.. ஓ .ஆர்.எஸ்.கார்னர் . அமைக்க சுகாதாரத்துறை உத்தரவு
/
கோவை அரசு மருத்துவமனையில்.. ஓ .ஆர்.எஸ்.கார்னர் . அமைக்க சுகாதாரத்துறை உத்தரவு
கோவை அரசு மருத்துவமனையில்.. ஓ .ஆர்.எஸ்.கார்னர் . அமைக்க சுகாதாரத்துறை உத்தரவு
கோவை அரசு மருத்துவமனையில்.. ஓ .ஆர்.எஸ்.கார்னர் . அமைக்க சுகாதாரத்துறை உத்தரவு
ADDED : மார் 08, 2026 05:24 AM

கோவை, தமிழகத்தில் வெப்ப அலை அதிகரித்துள்ள நிலையில், நீரிழப்பு சார்ந்த பிரச்னைகளை தவிர்க்க அரசு மருத்துவமனைகளில், ஓ.ஆர்.எஸ்., (Oral Rehydration Solution) கார்னர் அமைக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில், பொது மருத்துவம், குழந்தைகள் பிரிவு, அவசர சிகிச்சை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் வரும் இடங்களில் ஓ.ஆர்.எஸ்., கார்னர் அமைக்கப்படவுள்ளது. உள் நோயாளிகளுக்கு ஓ.ஆர்.எஸ்., பாக்கெட் வழங்கப்படும்.
வெயில் நேரங்களில் நீரிழப்பு சார்ந்த பிரச்னைகள் அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். கோடை விடுமுறையும் விரைவில் துவங்கவுள்ள சூழலில், குழந்தைகளின் உணவு முறையில் பெற்றோர் கவனமுடன் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
''பொதுவாக வெயில் அலை அதிகம் உள்ள சூழலில், நீரிழப்பு அதிகம் ஏற்படும். அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை விடுமுறை சமயங்களில் குழந்தைகள் பலர் துரித உணவு விரும்பி சாப்பிடுகின்றனர். பின் வயிற்று வலி, பேதி என சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களுக்கு துரித உணவு தவிர்த்து, பழங்கள், சத்தான உணவை நொறுக்கு தீனியாக கொடுக்கலாம்,'' என்கிறார் அரசு மருத்துவமனை டீன் கீதாஞ்சலி.

