தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காற்றுடன் பெய்த கனமழை: மரம் விழுந்ததால் பரபரப்பு

 காற்றுடன் பெய்த கனமழை: மரம் விழுந்ததால் பரபரப்பு

 காற்றுடன் பெய்த கனமழை: மரம் விழுந்ததால் பரபரப்பு


ADDED : ஜூலை 09, 2026 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 06:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சார்பதிவாளர் அலுவலக வளாகத்தில் செயல்பாட்டில் இல்லாத பொதுமக்கள் அமரும் அறை மீது மரம் விழுந்தது.

கிணத்துக்கடவு சார்பதிவாளர் அலுவலகத்துக்கு தினமும் பத்திர பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் அதிகளவு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், நேற்று காற்றுடன் பலத்த மழை பெய்ததால், பெரிய மரம் ஒன்று அலுவலக வளாகத்தில் இருந்த பயன்பாட்டில் இல்லாத பொதுமக்கள் அமரும் அறை மீது விழுந்தது. அதன் அருகே யாரும் இல்லாததால் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. அதன்பின், மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

* வால்பாறையில் காற்றுடன் கனமழை பெய்வதால் பல்வேறு இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள மளுக்கப்பாறை வனத்துறை சோதனை சாவடி அருகே, நேற்று காலை மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால், வால்பாறை - சாலக்குடி ரோட்டில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us