/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புனரமைப்பு பணிக்கு பள்ளிக்கு உதவிக்கரம்
/
புனரமைப்பு பணிக்கு பள்ளிக்கு உதவிக்கரம்
ADDED : பிப் 19, 2026 05:30 AM

ஆனைமலை: கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி புனரமைப்பு பணிக்கு, கோவை சிவா மில்ஸ் உரிமையாளர், ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.
கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பவள விழா நடைபெற உள்ளது. இதற்காக பள்ளியை புனரமைக்கும் பணிக்கு முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள் நிதி உதவி வழங்கி வருகின்றனர். அதில், பள்ளி கட்டட புனரமைப்பு பணிகளுக்காக, கோவை சிவா மில்ஸ் சேர்மன் அழகப்பன், ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.
உயர்கல்வித்துறை துணை தலைவர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயகுமார் முன்னிலையில் காசோலை வழங்கப்பட்டது. பள்ளிக்கு நிதி உதவி வழங்கியவரை பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பாராட்டினர்.

