sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நுண்ணீர் பாசனத்துக்கு மானியம் ஒதுக்கீடு தோட்டக்கலைத்துறை அழைப்பு

/

நுண்ணீர் பாசனத்துக்கு மானியம் ஒதுக்கீடு தோட்டக்கலைத்துறை அழைப்பு

நுண்ணீர் பாசனத்துக்கு மானியம் ஒதுக்கீடு தோட்டக்கலைத்துறை அழைப்பு

நுண்ணீர் பாசனத்துக்கு மானியம் ஒதுக்கீடு தோட்டக்கலைத்துறை அழைப்பு


ADDED : ஏப் 21, 2025 09:49 PM

Google News

ADDED : ஏப் 21, 2025 09:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடிமங்கலம்; 'பல்வேறு நன்மைகள் தரும் நுண்ணீர் பாசனத்தை மானியத்தில் அமைக்க, குடிமங்கலம் வட்டார விவசாயிகள், தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிமங்கலம் வட்டாரத்தில், 15 ஆயிரத்து 335 ெஹக்டேர் பரப்பளவில், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பிரதானமாக தென்னையும், காய்கறி பயிர்களான தக்காளி, சின்னவெங்காயம், பீட்ரூட், கொத்தமல்லி மற்றும் பழப்பயிர்களான வாழை, மா இப்பகுதியில், சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

சாகுபடியில், நீர் சிக்கனத்துக்கு உதவும் நுண்ணீர் பாசன முறையை விவசாயிகள் பின்பற்ற துவங்கியுள்ளனர். இதற்காக நடப்பாண்டு, தோட்டக்கலைத்துறை வாயிலாக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இது குறித்து, குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் செல்வக்குமார் கூறியதாவது:

நுண்ணீர் பாசன முறையில், விவசாயிகளுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.குடிமங்கலம் வட்டாரத்துக்கு, 2025-26ம் நிதியாண்டில், தோட்டக்கலைத்துறை வாயிலாக நுண்ணீர் பாசனம் அமைக்க, 610 ெஹக்டேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 4 கோடியே 80 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், சிறு விவசாயிகளுக்கு நுாறு சதவீத மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. ஏற்கனவே, நுண்ணீர் பாசனம் அமைத்து, மானியம் பெற்று 7 ஆண்டு முடிந்து இருந்தால், மீண்டும் மாற்றி அமைக்க மானியம் பெறலாம்.

எனவே, இந்த மானிய திட்டத்தை பயன்படுத்தி, விவசாயிகள் தங்கள் நிலங்களில் நுண்ணீர் பாசனம் அமைத்து கொள்ளலாம்.

மானியத்தில் பயன்பெற சிட்டா, அடங்கல், உரிமை சான்று, நிலவரை படம், கூட்டு வரைபடம், ரேஷன்கார்டு நகல், ஆதார் கார்டு நகல், வங்கிக்கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன், குடிமங்கலம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.

மேலும், விபரங்களுக்கு பெதப்பம்பட்டி உள்வட்டத்தை சேர்ந்த விவசாயிகள், உதவி தோட்டக்கலை அலுவலர் ராஜசேகரன், 86755 56865; சங்கவி 81110 55320 என்ற மொபைல் போன் எண்ணிலும், குடிமங்கலம் உள்வட்ட விவசாயிகள் உதவி தோட்டக்கலை அலுவலர் சரவணகுமார் 97891 97648; மதன் 97867 78651 என்ற மொபைல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us